செம்மொழி
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கோவை மாநகரில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ 2010-ஆம் ஆண்டு சூன் மாதம் 23 முதல் 27 வரை நடைபெற்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தமது 60 ஆண்டுக்கால ஆராய்ச்சியின் முடிவாகத் தமிழ் மொழியே உலகத் தமிழ்ச் செம்மொழி என 1966-ஆம் ஆண்டே தாம் எழுதிய ஆங்கில நூல் (The Primary Classical Language of the World) வாயிலாக அறிவித்தார். ஆயினும், அப்பெருமகனார்க்குச் செம்மொழி மாநாட்டில் அரசு சிறப்புச் செய்யாதது குறித்து தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.