தமிழன் என்னும் இனம் தமிழ் பற்றியதே யாதலால்,தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம்.அது
தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிநாடே ஆகும்.
ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. இன்றிருப்பவை யெல்லாம் மறுவிளைச்சல் (after - growth) போன்றவையே.
தமிழ்நாடு, வரலாற்றாலும் மக்களாலும் உணர்ச்சியாலும் கொள்கையாலும் மொழியாலும் இலக்கியத்தாலும் பிற நாடுகளிலும் வேறுபட்டதாகும். இதுவே தமிழ்நாட்டின் தனித்தன்மை.